search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூர்வார வேண்டும்"

    • அயன்பாப்பாகுடி கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • மாரி, பாக்கியம், செந்தில் ஆகியோர் மனு கொடுத்தனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் பகுதியில் மிகப்பெரிய கண் மாயாக அயன் பாப்பாக்குடி கண்மாய் விளங்கு–கிறது. இந்த கண்மாயில் தேக்கப்ப–டும் நீர் விவசாயம் மற்றும் இப்பகுதி நிலத்தடி நீர் உயர்வுக்கு காரணமாக விளங்குகிறது.

    இந்த கன்மாய்க்கு திருப்ப ரங்குன்றம் தென்கால் கண்மாயிலிருந்து உபரி நீர் வருவது உண்டு. இந்த நிலையில் தற்போது மதுரை பழங்காநத்தம், முத்துப்பட்டி, ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.–புரம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்த கண்மாயில் கலக்கிறது. மேலும் இந்த கண்மாயின் மடை திறக்கப்பட முடியாத நிலையில் உள்ளது.

    இந்த கண்மாயில் இருந்து நீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரப்படாமல் புல் புதராக மண்டிக்கிடக்கிறது. இதனால் கண்மாயில் நீர் பெருகி அருகே உள்ள குடி யிருப்பு பகுதிகளில் கழிவு நீர் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மலேரியா, டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாய நிலையும் இருக்கிறது.

    எனவே மதுரை மாவட்ட கலெக்டர் கண்மாயை ஆய்வு செய்து கண்மாய் கரைகளை பலப்படுத்தி நீர் வெளியேறும் கால்வாயை தூர்வாரி தர வேண்டும். மேலும் கண்மாய்க்குள் கலக்கும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என அவனியாபுரம் பொதுமக்கள் சார்பில் கவுன்சிலர்கள் கருப்புசாமி, அய்யனார் ஆகியோர் தலை மையில் மாரி, பாக்கியம், செந்தில் ஆகியோர் மனு கொடுத்தனர்.

    • வன அதிகாரியிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
    • விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

     ஊட்டி:

    முதுமலை- ஸ்ரீமதுரை எல்லையோரம் ஏற்கனவே உள்ள அகழிகள் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருகிறது.

    எனவே அகழியை முறையாக தூர்வார வேண்டும். இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

    இந்தநிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முதுமலை-ஸ்ரீமதுரை எல்லையோரம் உள்ள அகழியை தூர்வார வேண்டும் என ஊராட்சி தலைவர் சுனில் தலைமையில் பொதுமக்கள் கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரனை சந்தித்து முறையிட்டனர்.

    தொடர்ந்து முதுமலை கார்குடி வனச்சரகர் விஜயனை சந்தித்து இதே கோரிக்கையை வைத்தனர். அதற்கு அவர் அரசு நிதி ஒதுக்கியவுடன் அகழியை தூர்வாரும் பணி நடைபெறும் என உறுதி அளித்தார்.

    அதுவரை காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம். தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

    ×